Friday 25 November 2011

அருள் வரம் தாருமம்மா!

அன்னையுரூபம்மா ஆதிபராசக்தியம்மா












ஐயப்பனை கண்டுவர அருள்வரம் தாருமம்மா
ஐயப்பனை கண்டுவர அருள்வரம் தாருமம்மா

இருக்கண்குடி மாரியம்மா இன்னல்களை தீர்ப்பாயம்மா









இருமுடிகள் சுமந்துவர அருள்வரம் தாருமம்மா
இருமுடிகள் சுமந்துவர அருள்வரம் தாருமம்மா

சமயபுரத்தாளே சங்கடங்கள் தீர்ப்பவளே










சபரிமலை சென்றுவர அருள்வரம் தாருமம்மா
சபரிமலை சென்றுவர அருள்வரம் தாருமம்மா

தஞ்சையிலே வீற்றிருக்கும் முத்துமாரி தாயம்மா












தவக்கோலம் கொண்டவனை காண வரம் தாருமம்மா
தவக்கோலம் கொண்டவனை காண வரம் தாருமம்மா

மதுரையிலே வீற்றிருக்கும் மீனாட்சி தாயம்மா









மணிகண்டனை கண்டுவர அருள்வரம் தாருமம்மா
மணிகண்டனை கண்டுவர அருள்வரம் தாருமம்மா

காஞ்சியிலே வீற்றிருக்கும் காமாட்சி தாயம்மா









கவலைகளை தீர்த்திடவே அருள்வரம் தாருமம்மா
கவலைகளை தீர்த்திடவே அருள்வரம் தாருமம்மா

இருக்கண்குடி மாரியம்மா இன்னல்களை தீர்ப்பாயம்மா













இருமுடிகள் சுமந்துவர அருள்வரம் தாருமம்மா
இருமுடிகள் சுமந்துவர அருள்வரம் தாருமம்மா