Thursday 24 November 2011

ஓம் விக்னேஷ்வரா!

ஸ்ரீ மஹா கணபதி சரணம்.... சரணம்.... சரணம்...

ஓம் கார நாதா சரணம் .. சரணம்...

தேவாதி தேவா சரணம்.

விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா...
















ஆதியும் அந்தமும் ஆனவரே

ஆன்மீக மார்க்கம் தந்தவரே

ஆகம வேதங்கள் ஓதியவரே

ஆனந்த தாண்டவம் ஆடியவரே

ஆணை முகத்துடன் வந்தவரே

அரச மரத்தடி அமர்ந்தவரே

அருகம்புல் மாலை அணிபவரே

அன்பாலே எமை ஆள்பவரே

உமையாள் மகனே உலகாள்பவரே

இமை போல் எனை காத்திட வந்திடுவாயப்பா

சிவனார் மகனே சிவனேஸ்வரனே

விந்தையில் என்றும் நிறைவாய்

ஓம் விக்னேஸ்வரா ஓம் விக்னேஸ்வரா