வட பழநி யாண்டவனே
வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை யாண்டவனே
எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றி கந்தா
எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில்
அறிவாக நீ அருள்வாய்!
- ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்
==================================================================
ஆறிரு தடந்தோள் வாழ்க!
ஆறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க!
குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க!
யானைதன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க!
வாழ்க சீர் அடியாரெல்லாம்!
- கந்தபுராணம்