Thursday 14 July 2011

தெய்வ அருள் பெற வழி

தெய்வ அருள் பெற வழி      
                                          

* கோயிலுக்குப் போனாலும் சரி,  
  போகாவிட்டாலும் சரி, 

  தெய்வம் நமக்கு அருள்புரியும்.


* பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, 
தெய்வ அருளுக்கு பாத்திரமாகி விடுவோம்.


* மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். 
    பயமான, கபடமான, குற்றமான,
  பகைமையான எண்ணங்களை 
  அகற்ற வேண்டும். 
  அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும்

   தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும்.


* வீட்டில் தெய்வத்தைக் காணும் 
  திறமை இல்லாதவன், 
மலைச் சிகரத்தை எட்டிப்பிடித்து 
அங்கே தவம் செய்தாலும் 
கடவுளை ஒருபோதும் காண முடியாது.


* கேட்டவுடனே நாம் கேட்ட அனைத்தையும் 
கொடுப்பதற்காக தெய்வம் இல்லை. 
பக்திப்பெருக்கினால் மனம் பக்குவம் 
பெற்ற பிறகுதான், 
நாம் கேட்ட வரத்தைத் தெய்வம் வழங்கும்.


* கோயிலில் மட்டுமே தெய்வம் இருக்கிறது
 என்று நம்புபவர்கள், நம்மைச் சூழ்ந்திருக்கும்
 ஜனங்களிடம் தெய்வத்தைக் காண முயல்வதில்லை. 
உலகை இயக்கும் பரம்பொருளே 
இத்தனை கோடி ஜீவராசிகளாக 
நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் 
என்பதை உணருங்கள்.